தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 536 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,45,025 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 306 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 3 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,31,375 பேர் குணமடைந்துள்ளனர், 10,948 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய தேதியில் 2,702 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.