நாட்டில் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டன், தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஆக உயர்ந்துள்ளதாக வியாழக்கிழமை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா இரண்டாம் அலை ஏற்பட்டிருக்கும் சூழலில், புதிய வகை கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.