மேற்குவங்கத்தில் நடைபெறவுள்ள முதற்கட்டத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
முதற்கட்டத் தேர்தலுக்காக நடைபெற்று வரும் இறுதி ஏற்பாடுகள் குறித்து சிலிகுரியில் இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் இந்திய துணைத் தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயின் மற்றும் பிற தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.