ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தில் உள்ள புல்-இ-ஆலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் 30க்கும் அதிகமானோர் பலியாகினர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து ஆப்கன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.