இந்தியா வந்தடைந்தது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

ரஷியாவிலிருந்து முதற்கட்டமாக 1.5 லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று இந்தியா வந்தடைந்தது.
இந்தியா வந்தடைந்தது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி
இந்தியா வந்தடைந்தது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

ரஷியாவிலிருந்து முதற்கட்டமாக 1.5 லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று இந்தியா வந்தடைந்தது.

நாட்டில் இந்திய தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்த சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து முதல் வெளிநாட்டு தடுப்பூசியாக ரஷிய நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்புட்னிக்-விக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ரஷியாவிலிருந்து முதற்கட்டமாக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு 1.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இன்று மாலை வந்தடைந்தது.

இந்த தடுப்பூசிகள் தெலங்கானா மாநிலத்திற்கு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com