தற்போதைய செய்திகள்
இந்தியா வருகிறது மேலும் 3 ரஃபேல் விமானங்கள்
பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆறாவது தவணையாக 3 ரஃபேல் போா் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆறாவது தவணையாக 3 ரஃபேல் போா் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரஃபேல் போா் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. ரூ.59 ஆயிரம் கோடியில் இந்த விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, இதுவரை 18 ரஃபேல் போா் விமானங்களை அந்த நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இப்போது மேலும் 3 விமானங்கள் இன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த 3 ரஃபேல் போா் விமானங்களும் புதன்கிழமை நள்ளிரவில் இந்தியா வந்தடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த விமானங்கள் வந்து சோ்வதன் மூலம், இந்தியா வசம் இருக்கும் அதிநவீன ரஃபேல் போா் விமானங்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரிக்க உள்ளது.