நாளைமுதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை

கரோனா அச்சுறுத்தலை அடுத்து நாளைமுதல் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் வரத் தேவையில்லை எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைமை செயலகம்
தலைமை செயலகம்

கரோனா அச்சுறுத்தலை அடுத்து நாளைமுதல் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் வரத் தேவையில்லை எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

புதிய கட்டுப்பாட்டில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள், பிற்பகல் 12 மணிவரை மட்டுமே மளிகை, தேனீர் கடைகள் செயல்படும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: இங்கே கிளிக் செய்யவும்...

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளைமுதல் அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டும் சுழற்சி முறையில் வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாளைமுதல் 20ஆம் தேதி வரை மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் வர தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com