சண்டீகரில் வார இறுதி நாள்கள் ஊரடங்கு அறிவிப்பு

பஞ்சாப் தலைநகர் சண்டீகரில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பஞ்சாப் தலைநகர் சண்டீகரில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாளை காலை 5 மணிமுதல் திங்கள்கிழமை காலை 5 மணிவரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கின் போது அத்தியாவசிய சேவைகள் தடையின்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கரோனா 2-வது அலை அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அம்மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com