நாடு முழுவதும் இதுவரை 16.73 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில்,
இன்று ஒரே நாளில் நாடு முழுவதும் 22,97,257 டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 16,73,46,544 டோஸ் கரோனா செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.