நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் கடந்த 7 நாள்களாக 180 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு பதிவாகவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா இரண்டாம் அலையால் நாள்தோறும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஹர்ஷ் வர்தன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
நாடு முழுவதும் கடந்த 7 நாள்களாக 180 மாவட்டங்களில், 14 நாள்களாக 18 மாவட்டங்களில், 21 நாள்களாக 54 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.