தெலங்கானாவில் நாளைமுதல் பொதுமுடக்கம் அறிவிப்பு

தெலங்கானா மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் மே 12 முதல் 10 நாள்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் நாளை முதல் பொதுமுடக்கம்
தெலங்கானாவில் நாளை முதல் பொதுமுடக்கம்

தெலங்கானா மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் மே 12 முதல் 10 நாள்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தெலங்கானாவிலும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இதையடுத்து இன்று மாநில அமைச்சரவைக் கூட்டம் கூடியது. அந்த கூட்டத்தில், மே 12ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காக காலை 6 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com