15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு
15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக அரசு பொறுப்பேற்றவுடன் முதற்கட்டமாக இரு டிஜிபிக்கள் உள்பட 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தியில்,

சென்னை காவல் ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால், சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவின் ஏடிஜிபியாக ஆபாஷ் குமார், பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவின் ஐஜியாக ஆர். தினகரன் நியமனம் செய்துள்ளனர்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் எஸ்.பி.யாக சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தமிழக காவல்துறையில் காத்திருப்பு பட்டியலில் இருந்த 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com