புதிய கல்வி கொள்கை: மே 17-ல் மத்திய அமைச்சர் ஆலோசனை

புதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக மே 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் ஆலோசனை செய்யவுள்ளார்.
அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

புதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக மே 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் ஆலோசனை செய்யவுள்ளார்.

வரும் கல்வியாண்டில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடனும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

மேலும், இந்த கூட்டத்தில் கரோனா சூழல், ஆன்லைன் வகுப்பு உள்ளிட்டவையும் ஆலோசனை செய்யப்படவுள்ளது.

கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை நுழைய அனுமதிக்க மாட்டோம் என கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com