சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை காலை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை காலை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியுள்ளது. 

தமிழகத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து டோக்கன் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அங்கு நோயாளிகளும் வருவதால் கூட்டம் அதிகம் காணப்பட்டதை அடுத்து, ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கீழ்ப்பாகம் அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆண்கள் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள 4 கவுண்டர்களில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாள் ஒன்றுக்கு 300 பேருக்கு மருந்து வழங்கப்படும் என்றும் கூட்டத்தைத் தவிர்க்க நேரு விளையாட்டரங்கில் கூடுதல் மையங்கள் அமைக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com