அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலை எதிர்கொள்வது குறித்து இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
தென் கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து சனிக்கிழமை காலை புயலாக உருவானது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18 ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது.
இந்த புயலுக்கு மியான்மா் நாடு வழங்கிய ‘டவ்-தே’ என்று பெயா் வைக்கப்படவுள்ளது. இந்த புயல் 150-160 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் காரணமாக, கேரளம், கர்நாடகம், தமிழகம், மகாராஷ்ரம், கோவா, குஜராத் மாநிலங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புயலை எதிர்கொள்வது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் இன்று மாலை பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.