சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 104 உயா்ந்து, ரூ.36,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி அன்று ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, விலை மீண்டும் உயா்ந்தது. அதிலும், கடந்த வாரம் மீண்டும் ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில், விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.36,106-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.13 உயா்ந்து, ரூ.4,520 ஆக இருந்தது. அதேநேரத்தில் வெள்ளி கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, ரூ.76 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து ரூ.76,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.