அவிநாசி: அவிநாசியில் லாரி மீது தனியார் நிறுவன வாகன பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் சனிக்கிழமை 4 பேர் படுகாயமடைந்தனர்.
கோவையில் இருந்து சேலம் நோக்கி தனியார் நிறுவனப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அவிநாசி புறவழிச்சாலை பழங்கரை அருகே சென்றுகொண்டிருந்து போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் வந்த 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர்.
இது குறித்து அவிநாசி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.