தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,
வெப்ப சலனம் காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
நேற்று திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.