தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் முழுப் பொதுமுடக்கம் அமலாகவுள்ள நிலையில், இன்றும், நாளையும் அனைத்து பேருந்துகளும் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில்,
வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று (22.05.2021) மற்றும் நாளை (23.05.2021) தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.