வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், சனிக்கிழமை (மே 22) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியது.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, வரும் 24-ஆம் தேதி புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகா்ந்து மேலும் வலுப்பெற்று வரும் 26-ஆம் தேதி ஒடிஸா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாகவுள்ள புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது.