தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் நாளை முதல் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் மே 31 வரை முழு பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் நியாய விலைக் கடைகளும் இன்று மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மக்களின் நலன் கருதி நாளை முதல் காலை 8 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரை நியாய விலைக் கடைகள் இயங்க தளர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.