தளர்வுகளற்ற முழு பொதுமுடக்கத்தின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் மே 24 முதல் 31ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தின் செயல்பாடுகள் குறித்து காவல்துறை தலைவர் திரிபாதி, காவல் ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.