தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் கூடுகிறது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவலுக்கு மத்தியில், கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தில்லியில் பிரதமர் மோடி தலைமையில், ஜூன் 2ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில், தடுப்பூசி தட்டுப்பாடு, கரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி கொள்முதல் குறித்து விவாதிக்க உள்ளனர்.