திருப்பூரில் தபால் வாக்குகளை பிரிக்கும் பணி 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி திருப்பூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 15 பேர் ஊராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
திருப்பூரில் தபால் வாக்குகளை பிரிக்கும் பணி 

திருப்பூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி திருப்பூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 15 பேர் ஊராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 

இதில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் மூன்று அடுக்குவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குகளை பிரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

இந்தத் தேர்தலில் பதிவான 457 தபால் வாக்குகளை மண்டலம் வாரியாக பிரிக்கும் பணியை மாநகராட்சி தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com