நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாகையில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
இம்மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் நகராட்சிகள், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேளாங்கண்ணி மற்றும் திட்டச்சேரி பேரூராட்சிகள் என 6 உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற்றது.
இவற்றின் வாக்கு எண்ணிக்கை, நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் இப்பணி நடைபெறுகிறது. வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.