ஜெய்ப்பூரில் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்: ஒருவர் கைது

ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.

துபை விமானத்தில் வந்த அந்த பயணி ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை பயணிகள் இருக்கையின் மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்தாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுங்கத்துறைச் சட்டம் 1962-இன் விதிகளின் கீழ் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பயணியையும் கைது செய்தனா். 

கைது செய்யப்பட்ட பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com