புதுவையில் அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 280 பேருக்கு தொற்று

புதுவையில் அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 280 பேருக்கு தொற்று

புதுவை மாநிலத்தில் கரோனா தோற்று, கடந்த மூன்று மாதங்களாக தினசரி தோற்று எண்ணிக்கை 10க்கும் கீழ் இருந்து வந்தது.


புதுவை மாநிலத்தில் கரோனா தோற்று, கடந்த மூன்று மாதங்களாக தினசரி தோற்று எண்ணிக்கை 10க்கும் கீழ் இருந்து வந்தது.

இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பிறகு தினசரி தொற்று எண்ணிக்கை அதிகமாக உயர்ந்து வருகிறது.

இந்த வகையில் புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில், மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், புதுச்சேரியில் 234 நபர்களுக்கும், காரைக்காலில் 27 பேர், மாஹேவில் 19 பேர் என மொத்தம் 280 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதால், மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,882 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் தற்போது 825 நபர்கள் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் இதுவரை 1,27,571 நபர்கள் தொற்று பாதித்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,30,278 நபர்கள் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தடுப்பூசி நிலவரப்படி., கரோனா தடுப்பூசி முதல் தவணை 8,74,619 பேரும், இரண்டாம் தவணை 5,76,671 பேரும் செலுத்தியுள்ளனர்.

மொத்தமாக 14,51,290 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com