உ.பி: மீரட் அருகே பயணிகள் ரயிலில் தீ விபத்து 

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள டவுராலா ரயில் நிலையத்தில் இன்று பயணிகள் ரயிலின் இன்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது.
பயணிகள் ரயிலில் தீ விபத்து .
பயணிகள் ரயிலில் தீ விபத்து .

மீரட்: உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள டவுராலா ரயில் நிலையத்தில் இன்று பயணிகள் ரயிலின் இன்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது.

பயணிகள் ரயில் சஹாரன்பூரில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தது. ரயிலின் எஞ்சின் மற்றும் தீ விபத்து ஏற்பட்ட இரண்டு பெட்டிகளில் இருந்து மீதமுள்ள பெட்டிகளை பிரிக்கும் முயற்சியில் பயணிகள் ஈடுபட்டனர்.

மேலும் தீ விபத்துக்கான காரணம், காயங்கள், உயிரிழப்புகள் குறித்து இந்திய ரயில்வேயின் போக்குவரத்து ஆய்வாளர் ஒய்.கே.ஜா ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com