'நீங்க செய்ற தவறுக்கெல்லாம் உங்க பையன் அடி வாங்குறான்'
'என்ன சார் சொல்றீங்க?'
'ஹோம் ஒர்க் பூராவும் தப்பு, தப்பா இருக்கு'
- கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.
**
'தலைவர் மைக்செட்காரங்ககிட்ட லஞ்சம் வாங்கிட்டாரா எப்படி?'
'மேடையில பேசும் போது அரைமணி நேரத்துக்கு ஒரு தடவை சிறந்த ஒளி, ஒலி அமைப்புக்கு ராஜா சவுண்ட் சர்வீஸ்னு சொல்றாரே'
- ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
**
'ஏங்க என்கிட்டே உங்களுக்குப் பிடிச்சது என்னோட அன்பா? அழகா?'
'அப்பப்போ இப்படி ஜோக் அடிக்கிறியே அந்த நகைச்சுவை உணர்வுதான்'
- த.ஜோதி, சென்னை-19.
இவர்: உங்க நகைச்சுவை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்குது சார்
அவர்: அட, அப்படியா?
இவர்: ஆமா சார் முதல்ல சிரிச்சுடறோம், அப்புறம்தான் ஏன் சிரிச்சோம்னு சிந்திக்கிறோம்.
- எஸ்.பொருநைபாலு, திருநெல்வேலி.
'அந்த கிளி ஜோசியர் நவீனமா கிளி ஜோசியம் சொல்றாரா? எப்படி?'
'லேப் டாப்ல கிளி வருது... அது சீட்டு எடுத்து கொடுக்குது'
- பி.பரத், கோவிலாம்பூண்டி.
'என்னடா "கெக்கு'னு எழுதியிருக்கிறே.. அது 'கொக்கு'டா மக்கு..'
'நீங்க தானே நொண்டிக் 'கொக்கு'னு சொன்னீங்க அதான் காலை எடுத்திட்டேன்'
- எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
'நாமதான் ஒரு சேலை வாங்கினா ஒரு குடம் இலவசமாத் தர்றோம்மே... அப்படியிருந்தும் அந்தக் கடையில் கூட்டம் நிரம்பி வழியுதே?''
'அவங்க ஒரு சேலை வாங்கினா ஒரு குடம் தண்ணி இலவசம்ன்னு அறிவிச்சிருக்காங்களே'
- பி.பால்ராம மூர்த்தி, அம்பாசமுத்திரம்.
'உங்களை தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாத்திடுவேன்னு மிரட்டுறாரே... கொஞ்சங்கூட பயமில்லாம இருக்குறீங்க?'
'எல்லா ஊர்லயும்தான் தண்ணி இல்லை.... இதுல இவர் என்ன புதுசா மாத்திடப் போறாரு?'
- ரா.ராஜதுரை, சீர்காழி.