கரோனா: பிரிட்டனில் ஒரே நாளில் 563 பேர் பலி!

கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் பிரிட்டனில் ஒரே நாளில் மிக அதிக அளவாக 563 பேர் உயிரிழந்தனர்.
கரோனா: பிரிட்டனில் ஒரே நாளில் 563 பேர் பலி!

கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் பிரிட்டனில் ஒரே நாளில் மிக அதிக அளவாக 563 பேர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, கரோனா பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,789-லிருந்து 2,352 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே, முந்தைய நாளில் 381 பேர் உயிரிழந்தனர். தற்போது 563 பேர் உயிரிழந்ததை சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. இது 50 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

இதே நிலை தொடர்ந்தால், பிரிட்டனில் நிலைமை மிகவும் மோசமாகி, உயிரிழப்புகளின் எண்ணிக்கை வெகுவேகமாக உயர்ந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும், பிரிட்டனில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கையும் 25,150-லிருந்து 29,474 ஆக உயர்ந்திருக்கிறது.

கரோனா நோய்த் தொற்று பாதித்திருக்கிறதா என்றறிவதற்காக சோதனை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கையும் 1.5 லட்சமாக அதிகரித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com