விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) வரை கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43-ஆக இருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் நான்கு பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு, பாதித்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தொற்றில் ஒரு வயது குழந்தை இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேர் அடங்குவர்.