அமிர்தசரஸ்: இந்திய - பாகிஸ்தான் எல்லையோர கிராமத்தில் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற அடையாளந் தெரியாத பாகிஸ்தானியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
எல்லையில் பிந்தி சாய்தா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் சந்தேகத்துக்கிடமான நடமாட்டங்கள் இருப்பதை எல்லைப் பாதுகாப்புப் படையினர் அறிந்தனர்.
இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற ஒருவரை மீண்டும் மீண்டும் எச்சரித்தபோதும் கேட்காததால் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் இறந்தார்.
அவரிடமிருந்து எவ்வித ஆயுதங்களோ, வெடிபொருளோ அல்லது சந்தேகத்துக்குரிய பொருள்களோ கைப்பற்றப்படவில்லை.