சேலம் கோட்டம், கோவை ரயில்வே பணிமனை ஊழியர்கள் கிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் விழாவினை கொண்டாடினர்.
வருடம் தோறும் ஒவ்வொரு பண்டிகையையும் சிறப்பாக கொண்டாடும் பனைமனை ஊழியர்கள் இந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று பொதுமுடக்கத்தால் பல்வேறு பண்டிகைகள் கொண்டாட முடியாமல் போனது.
இந்நிலையில், பொதுமுடக்க தளர்வுகளுக்கு பின் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நீண்ட நாள் இடைவெளிக்கு பின் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதில் சாண்டா வேடமணிந்தும் சாண்டா முகமுடி அணிந்தும் ஆடல் பாடல்களுடன் இப்பண்டிகையை கொண்டாடினர்.
நீண்ட நாள்களுக்கு பிறகு பணிமனையில் இது போன்று மகிழ்ச்சியான நிகழ்வு நடத்தப்பட்டுள்ளதாகவும், வருகின்ற வருடம் அனைவருக்கும் இனிதே அமைய வேண்டும் என்றும் பணிமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.