குறைந்து வரும் தேங்காய் பருப்பு விலை: தென்னை விவசாயிகள் கவலை

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக தேங்காய் பருப்பு விலையில் சரிந்து வருவதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
குறைந்து வரும் தேங்காய் பருப்பு விலை
குறைந்து வரும் தேங்காய் பருப்பு விலை

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக தேங்காய் பருப்பு விலையில் சரிந்து வருவதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி வரை ஏலம் நடைபெற்றது. 

இந்த வார ஏலத்துக்கு திருச்சி, லாலாப்பேட்டை, வாணியம்பாடி, பழனி, தாராபுரம், மூலனூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 140 விவசாயிகள் தங்களுடைய 1,182 மூட்டைகள் தேங்காய் பருப்புகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனர். இவற்றின் எடை 57,595 கிலோ. 

காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூர், மூலனூர், நஞ்சை ஊத்துக்குளியைச் சேர்ந்த 17 வணிகர்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனர்.

விலை கிலோ ரூ.70 முதல் ரூ.130.10 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.122.40 ஆக இருந்தது.

விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.56 லட்சத்து 44 ஆயிரத்து 699 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

கடந்த வாரத்தை விட 100 மூட்டைகள் வரத்து அதிகரித்த நிலையில், விலை கிலோவுக்கு 2 ரூபாய் குறைந்தது. கடந்த வாரம் 7 ரூபாய் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கயத்தில் தேங்காய் பருப்பு விலை தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com