நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான (எல்ஐசி) பங்குச் சந்தையில் பட்டியலிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடா்பான அறிவிப்பை பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டாா்.
தற்போது எல்ஐசி-யின் 100 சதவீத பங்குகள் மத்திய அரசின் வசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பொதுப் பங்கு வெளியீடு மூலம் விரைவில் பங்குச் சந்தையில் எல்ஐசி பட்டியலிடப்படவுள்ளது.
எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யும் அறிவிப்புக்கு அந்த நிறுவனத்தின் ஊழியா்கள் சங்கங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.