சென்னை: விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி பிரிவில், பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், சென்னையில் இருந்து குருவாயூருக்கு புறப்படும் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்படுகிறது.
விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி பிரிவில், பராமரிப்பு பணி வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதன்காரணமாக, குருவாயூா் விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து சனிக்கிழமை (பிப்.8) முற்பகல் 11 மணிக்கு புறப்படும். பொதுவாக, இந்த ரயில் காலை 8.25 மணிக்கு புறப்படுவது வழக்கம்.
இந்தத்தகவல் ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.