மும்பையில் திங்கள்கிழமை இரவு பந்த்ராவிலிருந்து கோரேகான் வரையிலும் சைக்கிளில் சென்ற ஹிந்தி நடிகர் சல்மான் கான்.
லாஸ் ஏஞ்சலீஸில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்குவிழாவின்போது, நான்கு விருதுகளை வென்ற 'பாராசைட்' திரைப்படத்தின் நடிகர் குழுவினர் தற்படம் எடுத்துக்கொண்டனர்.
திருவனந்தபுரத்தில் மகாத்மா அய்யன்காளி அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ்.ஸின் முதுபெரும் தலைவரும் கோட்பாட்டாளருமான மறைந்த பி. பரமேசுவரனின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
ஜப்பானில் யோகோஹாமா துறைமுகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அச்சத்தால் தனிப்படுத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலைச் சுற்றிப் பணியாற்றுவதற்காகக் கவச உடையணிந்து செல்லும் பணியாளர்கள். இந்தக் கப்பலில் இருக்கும் பயணிகளில் 60-க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாராணசியில் கங்கைக்குச் சென்று வழிபட்ட பின் கால பைரவர் கோவிலில் வழிபடும் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபட்ச.
வாராணசியில் குரு ரவிதாஸ் அவதார தினத்தையொட்டி ரவிதாஸ் கோவிலில் வழிபாடு நடத்தினார் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி. பதினாலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான ரவிதாஸ், வட இந்தியாவில் பக்தி இயக்கத்தில் மிகவும் முக்கியமான ஒருவர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹஜாரிபாக்கில் சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி சிலை.
கொல்கத்தாவில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை வாசகர்களால் நிரம்பி வழிந்த கொல்கத்தா புத்தகக் காட்சி வளாகம்.
குவைத்தில் ஹவாலி ஆட்சிப் பகுதியில் நடைபெற்ற ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கைப் புலனறிவுத் திருவிழாவில் ரோபோக்களைப் பார்த்து வியந்து நிற்கும் குழந்தைகள்.