வாராணசியில் தாங்கள் தொடங்கிய உணவு விடுதியின் தொடக்க விழா நாளில் உணவு பரிமாறுகின்றனர் அமில வீச்சில் தப்பிய பெண்கள். அமில வீச்சில் தப்பிய பெண்கள் இணைந்து இந்த உணவு விடுதியை நடத்துகின்றனர்.
இந்தியா வந்துள்ள போர்த்துகேய அதிபர் மார்ஷெல் ரிபெல் டி சோஸாவை, ஹைதராபாத் இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்திப்புக்கு முன் வரவேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் உயர் அலுவலர்கள்.
புல்வாமா தாக்குதலில் உயிர்துறந்த மத்திய கூடுதல் பாதுகாப்புப் படை வீரர்களின் நினைவாக சென்னையில் வெள்ளிக்கிழமை அவர்களுடைய படங்களைவைத்து அஞ்சலி செலுத்தும் மக்கள்.
சீனாவில் கரோனா வைரஸ் பாதித்த வூஹான் நகரிலிருந்து அழைத்து வரப்பட்டு, நோய்த் தொற்று அச்சம் காரணமாகத் தில்லியில் தனித்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களில் சிலர்.
விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஔரங்காபாத் சித்தார்த் விலங்கியல் பூங்காவிலிருந்து மும்பையிலுள்ள வீரமாதா ஜீஜாபாய் போஸலே விலங்கியல் பூங்காவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள இரு புலிகள்.
ஜோர்தான் நாட்டில் அம்மான் நகரில் காதலர் தினக் கொண்டாட்டத்துக்காக பலூன் குவியல்களைத் தயார் செய்கிறார் விற்பனையாளர் ஒருவர்.
பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் செயின்ட் ஸ்கொலாஸ்டிகா கல்லூரி திட்டமிட்டு நடத்திய கூட்டு நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியரும் ஆசிரியர்களும்.
அமெரிக்காவில் சிகாகோ நகரில் கிழக்கு 73-வது தெருவில் வெளியே நிறுத்தப்பட்டதால் பனிப் போர்வை போர்த்தியிருக்கும் சைக்கிள்.