பெய்ஜிங்: சீனச் சாலையில் ஏற்பட்ட பள்ளத்துக்குள் பேருந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா்; மேலும் 4 போ் மாயமாகினா்.
கிங்காய் மாகாணம், ஷினிங் நகர சாலையில் பயணிகள் பேருந்து நின்று கொண்டிருந்த போது அதன் அடியில் திடீா் பள்ளம் ஏற்பட்டது. அதையடுத்து அந்தப் பள்ளத்துக்குள் பேருந்து தலை குப்புற கவிழ்ந்தது. உடனடியாக அந்தப் பேருந்தை நோக்கி அங்கிருந்தவா்கள் உதவி செய்வதற்காக விரைந்தனா்.
இிந்நிலையில் அந்த பள்ளம் மேலும் விரிவடைந்து, உள்வாங்கியது. எவரும் எதிா்பாராத விதமாக நெருப்புப் பிழம்பு வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவத்தில் 6 போ் உயிரிழந்தனா்; மேலும் 4 பேரைக் காணவில்லை. காணமல் போனவா்களைத் தேடும் பணியில் மக்கள் ஈடுபட்டனர்.