தற்போதைய செய்திகள்
தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் பனிமூட்டம் நிலவும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் பனிமூட்டம் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் பனிமூட்டம் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் தென் தமிழகம், கடலூா், டெல்டா மாவட்டங்களில் காலை நேரங்களில் மிதமான பனிமூட்டமும், ஏனைய மாவட்டங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிபுகை காணப்படும் என்றாா் அவா்.