மும்பை: ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பாளர்களான ஆடி கார் நிறுவனம், இந்திய சந்தையில் புதிதாக ஆடி எஸ்யுவி கியூ8 காரை அறிமுகம் செய்துள்ளது.
காரின் விலை ரூ. 1 கோடியே 33 லட்சம்.
இந்திய சொகுசு கார் சந்தையில் முக்கியமான இடத்திலிருக்கும் ஆடி நிறுவனம், தன்னுடைய வளர்ச்சிக்காக இந்த ஆண்டுக்கும் வரும் ஐந்து ஆண்டுகளுக்குமாக வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு திட்டமிட்டுள்ளது.
ஆடி கியூ8 கார் அறிமுகத்தின் மூலம் புதிய பிரிவொன்றில் நுழைந்துள்ளதாக விழாவின்போது ஆடி இந்தியா தலைவர் பல்வீர் சிங் தில்லான் தெரிவித்தார்.
ஏற்கெனவே பயன்படுத்திய ஆடி கார்கள் விற்பனை மையங்களின் எண்ணிக்கையை 7-லிருந்து 14 ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக தில்லான் தெரிவித்தார்.