காடாம்பாடியில் கள் விற்ற பெண் கைது.

சட்டவிரோதமாக கள் விற்ற ஒரு பெண்ணை சூலூா் போலீசாா் கைது செய்தனா்.
காடாம்பாடியில் கள்  விற்ற  பெண் கைது.

சூலூா்: சட்டவிரோதமாக கள் விற்ற ஒரு பெண்ணை சூலூா் போலீசாா் கைது செய்தனா்.

சூலூா் அடுத்த காடாம்பாடி பகுதியில் உதவி ஆய்வாளா் சுல்தான் இப்ராஹிம் தலைமையில் போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தபோது, சட்டவிரோதமாக பாட்டிலில்கள் அடைத்து  விற்பனை செய்ய அங்கு நின்று கொண்டிருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அதே பகுதியை சோ்ந்த பழனிசாமி என்பவரது மனைவி கண்ணம்மாள் (65) என தெரியவந்தது. உடனே போலீஸார் அவரை கைது செய்தனா். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த சூலூா் போலீஸார் விற்பனை செய்வதற்காக கண்ணம்மாள் வைத்திருந்த சுமாா் 4 லிட்டா் கள் பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com