ராணுவ தினத்தையொட்டி புது தில்லியில் நடைபெற்ற விழாவின்போது ராணுவத்தினரைச் சந்தித்துப் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
குஜராத்தில் நர்மதை அணை அருகே புதன்கிழமை உத்தராயணக் கொண்டாட்டத்தின்போது பறக்க விடப்பட்ட பட்டங்களுக்கு நடுவே சர்தார் வல்லபபாய் படேல் சிலை.
காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் தொடர்ந்து பனி பொழியும் நிலையில் பனி போர்த்திய சாலையொன்றில் நடந்து செல்கிறார் ஒருவர்.
காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் தொடர்ந்து நாலாவது நாளாகப் பனி பொழிந்துகொண்டிருக்கிறது. இதனால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டு விட்டன. ஸ்ரீ நகர் சாலையொன்றில் பனிக்குவியலை அகற்றும் பணியில் உள்ளூர்த் தொழிலாளர்கள்.
மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆடி கியூ8 காருடன் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி.
மும்பையில் பொங்கல் திருநாளையொட்டி, தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் தாராவி பகுதியில் வீதிகளில் திரளாகப் பொங்கல் வைத்துக் கொண்டாடும் தமிழர்கள்.
வாராணசியில் மகர சங்கராந்தியையொட்டி கங்கை நதியில் புதன்கிழமை புனித நீராடும் பக்தர்கள்.
ராணுவ தினத்தையொட்டி தில்லியில் தேசீய போர் வீரர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் விபின் ராவத். உடன் ராணுவ உயர் அலுவலர்கள்.
ஜம்மு நகரில் மேம்படுத்தப்பட்ட மௌலானா ஆசாத் விளையாட்டரங்கத் தொடக்க விழாவில் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் கிரீஷ் சந்திர மர்மூ.
பிகாரின் தலைநகர் பாட்னாவில் புதன்கிழமை நடைபெற்ற மகர சங்கராந்தி விழாக் கொண்டாட்டத்தில் முதல்வர் நிதீஷ் குமாரும் துணை முதல்வர் சுசீல் குமார் மோடியும்.
ஹிமாசலப் பிரதேசத்தில் கின்னார் மாவட்டம் பவன் நகர் அருகே நிலச் சரிவு காரணமாகத் தடைப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை -5.
நேபாளத்திலுள்ள பக்தபூரில் புதன்கிழமை நடைபெற்ற மாதவ நாராயண விழாவில் அங்கப் பிரதட்சிணம் செய்து வேண்டுதலை நிறைவேற்றும் மக்கள். இந்தத் திருவிழாவின்போது சிவனை வேண்டிப் பாடல்களைப் பாடுவார்கள். இங்கே ஒரு மாத விரதத்துக்குப் பின், நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று மணமாகாத பெண்களும் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று மணமான பெண்களும் வேண்டிக் கொள்கிறார்கள்.
ஸ்பெயினில் துறைமுக நகரான தரகோனா அருகேயுள்ள தொழிற்பேட்டையொன்றில் ரசாயன ஆலையில் நேரிட்ட பெரும் வெடி விபத்தில் பற்றியெரியும் தீ.