சென்னைத் துறைமுகத்தையொட்டிய கடல் பகுதியில் சுமார் 50 கடல் மைல்கள் தொலைவில் வியாழக்கிழமை ஜப்பானிய கடலோரப் பாதுகாப்புப் படைக் கப்பலுடன் இணைந்து இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படைகள் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டன.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சென்னைத் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள்.
குஜராத்தில் ஹாஜிராவிலுள்ள எல்அன்டி ராணுவ தயாரிப்பு வளாகத்தில் கே9 வஜ்ரா-டி ரக பீரங்கியைப் பயன்பாட்டுக்குத் தொடக்கிவைத்த விழாவின்போது பீரங்கியின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக ராஞ்சியில் வியாழக்கிழமை மத்திய புலனாய்வுக் குழு சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் பிகாரின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ்.
கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் லட்ச தீபத்தையொட்டி அருள்மிகு பத்மநாப சுவாமி திருக்கோவில் முன் புதன்கிழமை இரவு திரண்டிருந்த பக்தர்கள் திரள்.
புது தில்லியில் வியாழக்கிழமை பெய்த திடீர் மழையில் நனைந்தபடி சைக்கிளில் செல்லும் சிறுவன்.
காஸா பகுதியிலுள்ள ராணுவ நிலைகளின் மீது புதன்கிழமை இரவு இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. படத்தில் காஸா நகரில் குண்டு வெடித்ததால் நேரிட்ட தீப்பிழம்பு.