இலங்கை நாடாளுமன்றம் மார்ச் 2-ல் கலைப்பு?

இலங்கையில் ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடத்த வசதியாக   அனேகமாக மார்ச் 2 ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை நாடாளுமன்றம் மார்ச் 2-ல் கலைப்பு?


கொழும்பு: இலங்கையில் ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடத்த வசதியாக   அனேகமாக மார்ச் 2 ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டம் 19-வது திருத்தத்தின்படி நாலரை ஆண்டுகளுக்குப் பிறகே நாடாளுமன்றத்தை அதிபர் கலைக்க முடியும்.

இதன்படி திடீர் தேர்தல் நடத்தும் நோக்கில், மார்ச் முதல் தேதிக்குப் பிறகு நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் கோத்தபய ராஜபட்ச அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயன்றளவு விரைவாக நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் அரசு ஆர்வமாக இருக்கிறது. அரசியல் கட்சிகள் ஏற்கெனவே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com