ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சிகார் பகுதியில் ஊராட்சித் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 97 வயதான பெண்மணி வித்யா தேவி.
மியான்மரில் யாங்கூனின் புறநகர்ப் பகுதியிலுள்ள கியாக்தான் நகரியப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்றுக் காளையை அடக்க முயலுவோர்.
உத்தரப் பிரதேசத்திலுள்ள மொராதாபாத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மகர சங்கராந்தி உற்சவத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்.
குடியரசு நாள் வருவதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ராவில் தாஜ் மஹால் வளாகத்தில் வலுப்படுத்தப்பட்டுள்ள காவல் ஏற்பாடுகள்.
மகாராஷ்டிரத்திலுள்ள தாணே நகரில் சனிக்கிழமை லிம்கா சாதனைப் புத்தகத்துக்காக சுமார் 2,500 மாணவ, மாணவிகள் சூரிய நமஸ்காரம் செய்வதைப் படமெடுக்கிறார் காவலர் ஒருவர்.
மியான்மரில் நே பி டா அரச அரண்மனையில் சனிக்கிழமை மியான்மர் அதிபர் யு வின் மின்ட் அளித்த விருந்தின்போது சீன அதிபர் ஜி ஷின்பிங் மற்றும் மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூச்சி.
ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்டில் நடைபெற்ற (சனிக்கிழமை) அடிலெய்ட் பன்னாட்டு டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற கோப்பையுடன் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி.