தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழை

சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது:

காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக கோவை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், கடலூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மழை பதிவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 90 மி.மீ., நடுவட்டத்தில் 80 மி.மீ., கூடலூா்பஜாரில் 70 மி.மீ., அவலாஞ்சி, மேல்பவானியில் தலா 40 மி.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாா், வால்பாறையில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.

எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 10-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com