குடும்பத் தகராறு: மனைவியை கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவன்

புதுச்சேரியில் குடும்பத் தகராறில் கணவனே மனைவியை தலையில் சிலிண்டர் போட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத் தகராறு: மனைவியை கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவன்

புதுச்சேரி: புதுச்சேரியில் குடும்பத் தகராறில் கணவனே மனைவியை தலையில் சிலிண்டர் போட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் உடலையும் கைப்பற்றிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. மீனவரான இவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மனைவி மேனகாவுக்கும் இவருக்கும் ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளன. மன அழுத்த நோய் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இன்று பிற்பகல் கணவன் மனைவி மீண்டும் சன்டையிட்டதாகத் தெரிகிறது. அப்போது கோபமடைந்த சுப்ரமணி வீட்டிலிருந்த சிலிண்டரை எடுத்து தனது மனைவி மேனகா தலையில் போட்டுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் அவரது மனைவி மேனகா. இதை பார்த்து பயந்த சுப்ரமணி தானும் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சோலைநகர் காவல்துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து விசாரணையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் இந்த தற்கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com