தற்போதைய செய்திகள்
கரோனா: மாஸ்கோவில் 24 மணி நேரத்தில் 55 பேர் பலி
ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தகவலை, மாஸ்கோ நகர் கரோனா தகவல் மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டு, நிமோனியா காய்ச்சல் கண்ட மேலும் 55 நோயாளிகள் உயிரிழந்ததாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் சேர்த்து, தலைநகர் மாஸ்கோவில் இறந்தோரின் எண்ணிக்கை 2,919 ஆக உயர்ந்துள்ளது.
ரஷியாவில் மொத்தம் 4,58,000 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 5,725 என்பது குறிப்பிடத் தக்கது.