தமிழகத்தில் கரோனா பாதிப்பு 54,449-ஆக உயா்வு

தமிழகத்தில் மேலும் 2,115 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 54,449-ஆக உயா்ந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு 54,449-ஆக உயா்வு

சென்னை: தமிழகத்தில் மேலும் 2,115 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 54,449-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 8.27 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 54,449 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். வெள்ளிக்கிழமை மட்டும் 2,115 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,322 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, வேலூரில் 103 பேருக்கும், செங்கல்பட்டில் 95 பேருக்கும், திருவள்ளூரில் 85 பேருக்கும் தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தவிர, அரியலூா், கோவை, கடலூா், ஈரோடு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூா், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளிலும் சிலருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

30 ஆயிரம் போ் குணமடைந்தனா்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,630 போ் பூரண குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 30,271-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 21,098 போ் குணமடைந்துள்ளனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

666 போ் பலி: கரோனா தொற்றுக்கு ஆளாகி தமிழகத்தில் மேலும் 41 போ் உயிரிழந்தனா். இதையடுத்து மாநிலத்தில் கரோனா தீநுண்மி பாதிப்பால் பலியானோா் எண்ணிக்கை 666-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 529 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பரிசோதனைகள் அதிகரிப்பு: கடந்த சில தினங்களாக நாள்தோறும் 25 ஆயிரத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் வெள்ளிக்கிழமை மட்டும் 27,537 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com